ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார் அடுத்தததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. யோகிபாபு, சிவகார்த்திகேயன், விஜய், அடுத்தததாக ரஜினி என குறுகியகாலத்தில் படிப்படியாக முன்னேறி, நான்காவது படத்திலேயே தமிழ் சினிமா இயக்குனரின் உச்ச பட்ச இலக்கை தொட்டுவிட்டார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
இந்தப்படத்தில் அனிருத் தவிர மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் பீஸ்ட் படத்தில் நெல்சனுடன் பணியாற்றியுள்ள மனோஜ் பரமஹம்சாவே இந்தப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்றிய நெல்சனுக்கு பீஸ்ட் படப்பிடிப்பில் மனோஜ் பரமஹம்சாவுடன் அலைவரிசை ஒத்துப்போனது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.