பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம், தனது காதலரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது காதலர் தினத்தை பொள்ளாச்சியில் ஒரு சாதாரண சாலையோர உணவகத்தில் கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவரின் மேல் தனது கால்களை போட்டபடி அன்யோன்யமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள காஜல் அகர்வால், 'இந்த அழகனை அவரது பிழைகள் பொறுத்து 2012லிருந்து காதலித்து வருகிறேன்.. ஹேப்பி காதலர் தினம்” என கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகளின் காதல் எதோ ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே மீடியாவில் கசிந்து விடும்.. நயன்தாரா, சமந்தா, அமலாபால் ஆகியோரின் காதல் விஷயம் எல்லாம் அப்படி உடனே வெளியானவை தான்.. ஆனால் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, அதாவது தனது திருமண அறிவிப்பை வெளியிடும் வரை தனது காதல் குறித்த ரகசியத்தை காஜல் அகர்வால் கட்டிக்காத்து வந்துள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.