இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் வீரபாண்டியபுரம். ஜெய்யுடன் மீனாட்சி கோவிந்தராஜன், சந்த்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு நடிகர் ஜெய் இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் தான் இசை அமைப்பாளர் ஆனது எப்படி என்பது குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது: எனக்கு இசை எங்கிருந்து வந்தது என கேட்டு விடாதீர்கள். 2012 லிருந்தே மியூசிக் கற்றுக்கோண்டேன். ஒரு இசை ஆல்பத்துக்காக பாடல்களை தயார் செய்தேன். அதில் ஒரு பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்தபொது சுசீந்திரன் கேட்டுவிட்டு யார் மியூசிக் என்றார், நான் தான் இசையமைத்தேன் என்றேன். அவர் ஆச்சரயப்பட்டு பாராட்டினார்.
திடீரென்று இந்தப்படத்திற்கு இசையமையுங்கள் என்று சொன்ன போது முதலில் பிராங்க் செய்கிறார் என்று நினைத்தேன். சீரியஸாக சொன்னார். கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் சுசீந்திரன் என்னை நம்பினார். இப்போது படத்தை முடித்து விட்டு பார்க்கும்போது என்னாலும் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. நான் இசை கற்றுக்கொண்டதற்கு என் குடும்பம் தான் காரணம். என் குடும்பத்திற்கு நன்றி.
இவ்வாறு ஜெய் பேசினார்.