பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
அண்ணாத்த படத்திற்கு பின் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரல் படத்தின் பூஜையும், மேயில் படப்பிடிப்பும் துவங்குகிறது.
கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார். ஏப்ரலில் பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில் அடுத்தப்படியாக ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ளார். குறுகிய காலத்திலேயே ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ள நெல்சனுக்கு அதிர்ஷ்டத்துடன் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.