பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ஆதி, ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கிளாப்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் மக்கள் ஓரளவிற்கு தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இன்னும் பழையபடி மக்கள் வரவில்லை. 'கிளாப்' படம் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கியுள்ளது. நல்ல விலை கிடைத்ததால் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் எனச் சொல்கிறார்கள்.
ஆதி தெலுங்கில் நடித்து கடைசியாக வெளிவந்த 'குட் லக் சகி' படம் தியேட்டர்களில் வெளியானது. அப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'தி வாரியர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஆதி.