3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ஆதி, ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கிளாப்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் மக்கள் ஓரளவிற்கு தியேட்டர்களுக்கு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இன்னும் பழையபடி மக்கள் வரவில்லை. 'கிளாப்' படம் இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கியுள்ளது. நல்ல விலை கிடைத்ததால் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் எனச் சொல்கிறார்கள்.
ஆதி தெலுங்கில் நடித்து கடைசியாக வெளிவந்த 'குட் லக் சகி' படம் தியேட்டர்களில் வெளியானது. அப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'தி வாரியர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஆதி.