நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

கொரோனா ஒமிக்ரான் அலை பரவல் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தான் நடந்து வருகிறது. கடந்த மாதம் வெளிவந்த படங்களுக்கு சுமாரான அளவில் கூட வரவேற்பும், வசூலும் இல்லை.
கடந்த வாரம் வெளியான விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படம் தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்து விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுவும் ஏமாற்றத்தைத்தான் தந்தது. மிக சுமாரான வசூல்தான் இப்படத்திற்குக் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, நாளை பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடித்துள்ள 'எப்ஐஆர்', விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'கடைசி விவசாயி', ராஜாஜி நடித்துள்ள 'கூர்மன்', புதுமுகம் கிஷன் நடித்துள்ள 'அஷ்டகர்மா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'எப்ஐஆர், கடைசி விவசாயி' ஆகிய படங்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வாரம் விஷாலுக்குக் கிடைக்காத வெற்றி விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி ஆகியோருக்குக் கிடைக்குமா என்பதற்கு நாளை வரை பொறுத்திருக்க வேண்டும்.