புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த அம்மாநில அரசு உத்தரவிட்டது. மிகப் பெரும் பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவ்வளவு குறைந்த கட்டணத்தை வசூலித்தால் தியேட்டர்காரர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்காது.
இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகத்தினர் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். ஆந்திர மாநில மந்திரிகளுடனும் சிலர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துப் பேச ஐதராபாத்திலிருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கான தனி விமானத்தில் ஐதராபாத்திலிருந்து விஜயவாடா சென்றனர். இன்று மகேஷ்பாபுவின் திருமண நாள் என்பதால் விமானத்திலேயே அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவருக்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.
சற்று முன்னர் ஆந்திர முதல்வருடனான பேச்சு வார்த்தை ஆரம்பமாகியுள்ளது.