மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் மஞ்சிமா மோகன். இவரது தந்தை விபின் மோகன் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த மஞ்சிமா, ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள எப்ஐஆர் படம் நாளை வெளிவருகிறது.
கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த காதல் செய்தியை இதுவரை மறுக்கவில்லை.