கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் மஞ்சிமா மோகன். இவரது தந்தை விபின் மோகன் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த மஞ்சிமா, ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன்பிறகு மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள எப்ஐஆர் படம் நாளை வெளிவருகிறது.
கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். இப்போது இவர்கள் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த காதல் செய்தியை இதுவரை மறுக்கவில்லை.