ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்ததை அடுத்து காதலர் தினத்திற்காக ஒரு ஆல்பம் இயக்கும் பணிகளில் ஈடுபட்டார் நடிகர் ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா. இதற்காக ஐதராபாத் சென்று ஆலோசனை நடத்தினார். ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நாளை முதல் ஐதராபாத் சென்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பை தொடங்குகிறார். மூன்று நாட்கள் இதற்கான படப்பிடிப்பை நடத்தி காதலர் தினத்திற்குள் இந்த ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.