இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கு பெயர் போன யாஷிகா சின்னத்திரையின் பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். சமீபத்தில் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருக்கும் யாஷிகா, போட்டோஷூட், ரியாலிட்டி ஷோக்கள் என பிசியாக வலம் வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் யாஷிகாவிடம் 'நீங்கள் கன்னித்தன்மை உடையவரா?' என அவர் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா எந்த வித டென்ஷனும் இல்லாமல் கூலாக 'இல்லை நான் யாஷிகா' என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக செலிபிரேட்டியாக வலம் வரும் பெண்களை, உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தேவையில்லாத கேள்விகளை நாகரீகமற்ற சில நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அவர்களை போன்றவர்களை யாஷிகா மிகவும் சாதரணமாக கடந்து சென்றதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல பெண்களிடம் கேள்வி கேட்பவர்கள் உண்மையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் எனவும், இவர்களின் கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு பதிலளித்து பெண்கள் தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.