கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கொரோனா பரவல் இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக வந்த போது ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதும் ஆரம்பமாகி அதிகமானது. முன்னணி நடிகர்கள் சிலரும் ஓடிடி பக்கம் வந்தது தியேட்டர்காரர்களை கோபமடைய வைத்தது.
சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான போது அதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படம் வெளியான 2020 நவம்பர் மாதத்தில் கொரானோ முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்களைத் திறந்தனர். அப்போது இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும். அதை இழந்த வருத்தம் தியேட்டர்காரர்களிடம் அதிகம் இருந்தது.
அதற்குப் பிறகு புதிய படங்கள் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடியில் படங்களை வெளியிடலாம் என பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்தனர். ஓடிடி வெளியீடுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. கடந்த வருடம் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படமும் ஓடிடியில்தான் வெளியானது. இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா நடித்த இரண்டு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அவை தியேட்டர்களில் வந்திருந்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமாகத்தான் அமைந்திருக்கும்.
2019ல் வெளிவந்த 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம்தான் தியேட்டர்களில் வெளியாகப் போகிறது. இரண்டு ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யா ரசிகர்கள் இப்படத்தைத் தியேட்டர்களில் காண காத்திருக்கின்றனர்.