பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் நாவல் உலகில் பல காலமாக விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாவல் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல்தான் அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.
எம்ஜிஆர் உள்ளிட்ட சிலர் இந்த நாவலைப் படமாக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள். ஆனால், மணிரத்னம் படப்பிடிப்பையே நடத்தி முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடக் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வழங்குவதே இல்லை. படத்தின் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு அப்டேட் மட்டும்தான் வந்திருக்கும். இந்நிலையில் இன்று திடீரென டுவிட்டரில் 'பொன்னியின் செல்வன்' அப்டேட்டை ஐஸ்வர்யா ரசிகர்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் நந்தினி, மந்தாகினி என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். கோடை விடுமுறை வெளியீடு என்றால் இந்நேரம் படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்தால் அது போய்க் கொண்டேயிருக்கும். அவ்வளவு கதாபாத்திரங்கள் நாவலில் உள்ளன. ரசிகர்களின் அப்டேட் வேண்டுகோள் படக்குழுவினருக்கு எட்டுமா ?.