புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் நாவல் உலகில் பல காலமாக விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நாவல் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல்தான் அதிகம் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.
எம்ஜிஆர் உள்ளிட்ட சிலர் இந்த நாவலைப் படமாக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள். ஆனால், மணிரத்னம் படப்பிடிப்பையே நடத்தி முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடக் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வழங்குவதே இல்லை. படத்தின் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு அப்டேட் மட்டும்தான் வந்திருக்கும். இந்நிலையில் இன்று திடீரென டுவிட்டரில் 'பொன்னியின் செல்வன்' அப்டேட்டை ஐஸ்வர்யா ரசிகர்கள் அதிகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் நந்தினி, மந்தாகினி என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். கோடை விடுமுறை வெளியீடு என்றால் இந்நேரம் படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்தால் அது போய்க் கொண்டேயிருக்கும். அவ்வளவு கதாபாத்திரங்கள் நாவலில் உள்ளன. ரசிகர்களின் அப்டேட் வேண்டுகோள் படக்குழுவினருக்கு எட்டுமா ?.