புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஐடி துறையில் பணியாற்றி வரும் வெங்கட் ரெட்டி தயாரித்து, நடிக்கும் படம் யாரோ, அவருடன் உபாசனா, சி.எம்.பாலா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சந்தீப் சாய் இயக்குகிறார், கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைக்கிறார். பிப்ரவரி 4ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சந்தீப் சாய் கூறியதாவது: நானும் வெங்கட்டும் அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருந்தோம், நாங்கள் இருவரும் எப்பொழுதும் சினிமா மீது எங்களுக்குள்ள தீராத ஆர்வத்தை பகிர்ந்துகொண்டோம். வேலையை விட்டுவிட்டு ஒரு குறும்படம் எடுத்தேன். அதைப் பார்த்த வெங்கட், நாங்கள் இணைந்து ஒரு முழு நீள திரைப்படத்தில் பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டார்.
இது மர்டர் மிஸ்ட்ரி, சைக்கோ த்ரில்லர், ஹாரர் இந்த மூன்றின் கலவையாக உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனித்த பங்களாவில் பெரும்பகுதி கதை நடக்கும். படத்தின் ஹீரோ ஒரு ஆர்கிடெக்ட் தன் பணி நிமித்தமாக அந்த பங்களாவுக்கு செல்கிறார். அந்த பங்களாவிலும் அதை சுற்றிலும் தொடர்ச்சியாக கொலை நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை வித்தியாசமான பார்வையில் சொல்கிறோம். என்றார்.