ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஐடி துறையில் பணியாற்றி வரும் வெங்கட் ரெட்டி தயாரித்து, நடிக்கும் படம் யாரோ, அவருடன் உபாசனா, சி.எம்.பாலா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சந்தீப் சாய் இயக்குகிறார், கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைக்கிறார். பிப்ரவரி 4ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சந்தீப் சாய் கூறியதாவது: நானும் வெங்கட்டும் அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருந்தோம், நாங்கள் இருவரும் எப்பொழுதும் சினிமா மீது எங்களுக்குள்ள தீராத ஆர்வத்தை பகிர்ந்துகொண்டோம். வேலையை விட்டுவிட்டு ஒரு குறும்படம் எடுத்தேன். அதைப் பார்த்த வெங்கட், நாங்கள் இணைந்து ஒரு முழு நீள திரைப்படத்தில் பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டார்.
இது மர்டர் மிஸ்ட்ரி, சைக்கோ த்ரில்லர், ஹாரர் இந்த மூன்றின் கலவையாக உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனித்த பங்களாவில் பெரும்பகுதி கதை நடக்கும். படத்தின் ஹீரோ ஒரு ஆர்கிடெக்ட் தன் பணி நிமித்தமாக அந்த பங்களாவுக்கு செல்கிறார். அந்த பங்களாவிலும் அதை சுற்றிலும் தொடர்ச்சியாக கொலை நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை வித்தியாசமான பார்வையில் சொல்கிறோம். என்றார்.




