புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் தற்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை, ராங்கி' ஆகிய படங்களும் வெளிவர வேண்டும்.
இந்நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த்ரிஷா கொரானோவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து கடந்த வாரம் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் முதல் வெப் தொடரான 'பிருந்தா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நாய்களுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டது பற்றி பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா, ஆகியோர் வரிசையில் த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க வந்துவிட்டார். இதில் அவர் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறியவுடனே பலரும் நடிக்க வந்துவிடுகிறார்கள்.