காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழில் தற்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை, ராங்கி' ஆகிய படங்களும் வெளிவர வேண்டும்.
இந்நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த்ரிஷா கொரானோவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து கடந்த வாரம் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் முதல் வெப் தொடரான 'பிருந்தா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நாய்களுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டது பற்றி பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா, ஆகியோர் வரிசையில் த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க வந்துவிட்டார். இதில் அவர் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறியவுடனே பலரும் நடிக்க வந்துவிடுகிறார்கள்.