கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு முன்னே நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஆனால், அவருக்கு அந்த காலக்கட்டத்தில் நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதே போல், திரைபிரபலமாக இருந்தாலும், திரைக்கு வெளியே அவர் செய்த சர்ச்சைகளால் தான் அவர் மிகவும் பிரபலமானார் என்பது வேறு கதை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது கேரியரில் டர்னிங் பாய்ண்டை அடைந்துள்ள வனிதா விஜயகுமார், நடிப்பு, பிசினஸ் என பொறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படம் ஒன்றின் புரோமோஷனில் பேசிய அவர், சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன் என பேட்டியளித்துள்ளார்.
தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வனிதா, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, 'சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தைக் கோட்டைவிட்டு விட்டேன். முட்டாள்தனம் செய்துவிட்டேன். வில்லியாக தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பேன். இனி காமெடியோ, வில்லியோ, குணச்சித்திரமோ சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் ஒரு கை பார்ப்பதாக முடிவு செய்துவிட்டேன்' என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் சமிபத்தில் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.