'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கடந்த சில வாரங்களுக்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது. செம்மரக்கடத்தல் பின்னணியில் சுகுமார் இயக்கிய இந்தப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க, பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார். படக்குழுவினர் அதிரி புதிரி வெற்றியை எதிர்பார்த்தாலும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியை புஷ்பா பெற்றது.
இந்தநிலையில் இந்தப்படத்தையும் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார் நடிகர் கார்த்தி. “அல்லு அர்ஜுன். புஷ்பாவாக உங்களுடைய நடிப்பை பார்த்து அசந்து போனேன். ..நம்மை சிறைபிடிக்கும் அப்படி ஒரு நடிப்பு.. சுகுமார் சார் இந்த கதையின் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் உயர்தரத்தில் நீங்கள் படமாக்கிய விதம் அருமை” என குறிப்பிட்டுள்ளார் கார்த்தி.
பதிலுக்கு “என்னுடைய நடிப்பு மட்டுமின்றி ஒவ்வொருவருவரின் உழைப்பால் உருவான புஷ்பாவுக்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் கொடுத்த பாராட்டுக்களுக்கு நன்றி” என கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.