‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

கடந்த சில வாரங்களுக்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது. செம்மரக்கடத்தல் பின்னணியில் சுகுமார் இயக்கிய இந்தப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க, பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருந்தார். படக்குழுவினர் அதிரி புதிரி வெற்றியை எதிர்பார்த்தாலும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியை புஷ்பா பெற்றது.
இந்தநிலையில் இந்தப்படத்தையும் அல்லு அர்ஜுனின் நடிப்பையும் பாராட்டியுள்ளார் நடிகர் கார்த்தி. “அல்லு அர்ஜுன். புஷ்பாவாக உங்களுடைய நடிப்பை பார்த்து அசந்து போனேன். ..நம்மை சிறைபிடிக்கும் அப்படி ஒரு நடிப்பு.. சுகுமார் சார் இந்த கதையின் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் உயர்தரத்தில் நீங்கள் படமாக்கிய விதம் அருமை” என குறிப்பிட்டுள்ளார் கார்த்தி.
பதிலுக்கு “என்னுடைய நடிப்பு மட்டுமின்றி ஒவ்வொருவருவரின் உழைப்பால் உருவான புஷ்பாவுக்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் கொடுத்த பாராட்டுக்களுக்கு நன்றி” என கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.




