'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையடுத்து கனெக்ட் மற்றும் காட்பாதர், கோல்ட், ஹிந்தியில் அட்லி இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். மேலும், சாய் வாலா என்கிற டீ நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்து வரும் நயன்தாரா, கடந்த மாதத்தில் தனது தோழியுடன் இணைந்து டி லிப் பாம் கம்பெனி என்கிற அழகுசாதன பொருள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது துபாயில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தவே கடந்த புத்தாண்டு தினத்தின் போதும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவர் துபாய் நாட்டுக்கு சென்றதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆக, சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர் என்று செயல்பட்டு வரும் நயன்தாரா தற்போது பல பிசினஸ்களிலும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்.