ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி |
தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜெய்பீம் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக பாலா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அதையடுத்து ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு சூர்யா கால்சீட் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு அந்த கதை ஐம்பது வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் எந்த மாற்றங்கள் நடக்கும், மக்களின் அவசர வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு கற்பனையில் இந்த படம் உருவாகிறது. இந்தப்படத்தின் கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் மட்டுமே ஒரு வருடம் நடைபெற உள்ளதாம். அதனால் அடுத்தாண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.