புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சினிமா வாய்ப்புள் இல்லாவிட்டாலும் இணையதளம் மூலம் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். இதனாலேயே இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் ‛தில்லு இருந்தா போராடு' என்ற படத்தில் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.
வனிதாவுடன் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா,யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர், சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும் கவனிக்கிறார்கள். கே.முரளிதரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள். அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது.
பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற பெண் தாதாவின் உதவி கிடைக்கிறது. அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் தில்லு இருந்தா போராடு. இதில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா நடிக்கிறார். இவ்வாறு கூறினார்.