பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா மூன்றாவது அலை பரவல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்நிலையில் ஆந்திராவிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. நாளை முதலே இது அமலுக்கு வருகிறது.
இதன் காரணமாக பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சில தெலுங்குப் படங்கள் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏற்கெனவே டிக்கெட் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் கடும் சிக்கலில் உள்ளார்கள். இந்நிலையில் 50 சதவீத இருக்கை என்பது அவர்களது வருவாயை மேலும் குறைத்துவிடும்.
தென்னிந்திய மாநிலங்களில் இன்னும் தெலங்கானாவில் மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களில் காட்சிகள் நடைபெற்று வருகிறது. அங்கும் விரைவில் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களாவது இந்த நிலை நீடிக்கலாம் எனத் தெரிகிறது.