இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சாதகமாக உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழக முதல்வரை பாராட்டியும், கொங்கு மண்டல மக்கள் பயன்பெறுவார்கள் என்பதாக குறிப்பிட்டும் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. இது போலியானது என்று சூர்யாவின் நண்பரும், சூர்யாவின் தயாரிப்பு நிறுவன செயல் அதிகாரியுமான ராஜசேகர பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.