பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
மலையாள நடிகையான அஞ்சு குரியன். சென்னை டூ சிங்கப்பூர் படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு இக்ளு என்ற படத்தில் நடித்தார். தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாள படங்களுக்கு சென்று விட்டார். தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
எஸ்.ஏ.எஸ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. புதுமுகம் மணிவர்மன் இயக்குகிறார். இதில் அஞ்சு குரியன் ஆரி அர்ஜுனா ஜோடியாக நடிக்கிறார். தமன் குமார் இசை அமைக்கிறார். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஈரோடு மகேஷ், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.