ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டர் மிகவும் பிரபலம். நாய்சேகர் என்ற பெயரில் காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் இயக்கி உள்ளார். குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஹீரோயின். ஜார்ஜ் மரியான், ஸ்ரீமன், ஞானசம்பந்தம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ்(சங்கர்) இசை அமைத்துள்ளார்.
படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் நாய் சேகர் டைட்டிலை முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருப்பதால் வடிவேலு ரீ என்ட்ரிக்கு இந்த டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் வடிவேலு படம் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் தயாராக இருக்கிறது.
நாய் சேகர் படத்தில் சதீசுக்கும், நாய்களுக்குமான பிரச்சினை தான் கதை. நாய் மனிதன் போன்றும், சதீஷ் நாய் போன்றும் நடந்து கொள்வார். இந்த படத்தில் நாய் பேசும். இதற்காக நடிகர் மிர்சி சிவா குரல் கொடுத்துள்ளார். சதீஷ், சிவாவின் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் இதனை செய்து கொடுத்திருக்கிறார். படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.