புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிக்க துவங்கி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2016ல் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகளில் 9 பாடங்களை கற்றுள்ளதாக அவர் மனம் திறந்துள்ளார்.
ராஷ்மிகா கற்றுள்ள 9 பாடங்கள்:
1- நேரம் மிக வேகமாக செல்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் நினைவுகளை உருவாக்க வேண்டும்.
2- இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது எப்படி எனக் கற்றுள்ளேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
3- வாழ்க்கையில் எதுவுமே எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள் விரும்புவதை அடைய எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
4- ஆனால் பொறுமையாக இருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. இது கடினமாக இருக்கலாம், ஆனால் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள்.
5- மற்றவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்க எப்போதும் ஏதாவது இருக்கும். அதனால் எப்போதும் கற்கத் தயாராக இருங்கள். அப்போது தான் நீங்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
6- உணர்ச்சிப் பொதிகளை விட்டுவிட கற்றுக்கொள்ளுங்கள்.
7- வாழ்க்கையில் நீங்கள் செயல்பட விரும்பும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்.. உதாரணமாக தொழில் என்றாலோ, காதல் என்றாலோ, குடும்பம் என்றாலோ, நேரம் ஒதுக்குங்கள். அது நீங்களாக இருந்தால், உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள். உங்கள் நேரம் உங்களுடையது.. விமானங்கள் உங்களுக்காக ஒருபோதும் காத்திருக்காது.
8- சுத்தமாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவது, கடினமாக உடற்பயிற்சி செய்வது, பெரிதாக புன்னகைப்பது, வெளிப்படையாக நேசிப்பது.
9- மக்கள் உங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்க மாட்டார்கள், எனவே நீங்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டியதில்லை. முதலில் உங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.