கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிக்க துவங்கி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2016ல் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகளில் 9 பாடங்களை கற்றுள்ளதாக அவர் மனம் திறந்துள்ளார்.
ராஷ்மிகா கற்றுள்ள 9 பாடங்கள்:
1- நேரம் மிக வேகமாக செல்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் நினைவுகளை உருவாக்க வேண்டும்.
2- இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது எப்படி எனக் கற்றுள்ளேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
3- வாழ்க்கையில் எதுவுமே எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள் விரும்புவதை அடைய எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
4- ஆனால் பொறுமையாக இருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. இது கடினமாக இருக்கலாம், ஆனால் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள்.
5- மற்றவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்க எப்போதும் ஏதாவது இருக்கும். அதனால் எப்போதும் கற்கத் தயாராக இருங்கள். அப்போது தான் நீங்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
6- உணர்ச்சிப் பொதிகளை விட்டுவிட கற்றுக்கொள்ளுங்கள்.
7- வாழ்க்கையில் நீங்கள் செயல்பட விரும்பும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்.. உதாரணமாக தொழில் என்றாலோ, காதல் என்றாலோ, குடும்பம் என்றாலோ, நேரம் ஒதுக்குங்கள். அது நீங்களாக இருந்தால், உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள். உங்கள் நேரம் உங்களுடையது.. விமானங்கள் உங்களுக்காக ஒருபோதும் காத்திருக்காது.
8- சுத்தமாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவது, கடினமாக உடற்பயிற்சி செய்வது, பெரிதாக புன்னகைப்பது, வெளிப்படையாக நேசிப்பது.
9- மக்கள் உங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்க மாட்டார்கள், எனவே நீங்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டியதில்லை. முதலில் உங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.