பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் நடிக்க துவங்கி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2016ல் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகளில் 9 பாடங்களை கற்றுள்ளதாக அவர் மனம் திறந்துள்ளார்.
ராஷ்மிகா கற்றுள்ள 9 பாடங்கள்:
1- நேரம் மிக வேகமாக செல்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் நினைவுகளை உருவாக்க வேண்டும்.
2- இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது எப்படி எனக் கற்றுள்ளேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
3- வாழ்க்கையில் எதுவுமே எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நீங்கள் விரும்புவதை அடைய எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
4- ஆனால் பொறுமையாக இருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. இது கடினமாக இருக்கலாம், ஆனால் பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள்.
5- மற்றவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்க எப்போதும் ஏதாவது இருக்கும். அதனால் எப்போதும் கற்கத் தயாராக இருங்கள். அப்போது தான் நீங்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
6- உணர்ச்சிப் பொதிகளை விட்டுவிட கற்றுக்கொள்ளுங்கள்.
7- வாழ்க்கையில் நீங்கள் செயல்பட விரும்பும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்.. உதாரணமாக தொழில் என்றாலோ, காதல் என்றாலோ, குடும்பம் என்றாலோ, நேரம் ஒதுக்குங்கள். அது நீங்களாக இருந்தால், உங்களுக்கு நீங்களே நேரம் கொடுங்கள். உங்கள் நேரம் உங்களுடையது.. விமானங்கள் உங்களுக்காக ஒருபோதும் காத்திருக்காது.
8- சுத்தமாக சாப்பிடுவது, நன்றாக தூங்குவது, கடினமாக உடற்பயிற்சி செய்வது, பெரிதாக புன்னகைப்பது, வெளிப்படையாக நேசிப்பது.
9- மக்கள் உங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்க மாட்டார்கள், எனவே நீங்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டியதில்லை. முதலில் உங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.