'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதுப்பற்றி இளையராஜா உடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் பயணித்து வரும் அவரின் நலம் விரும்பியான ஶ்ரீராமிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛ராஜா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அவர் அங்கு செல்வது வழக்கம். இன்று இரவு சாமி கும்பிட்டு விட்டு நாளை(ஜன., 1) காலை மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார். மதியம் 2மணிக்கு சென்னை வருகிறார். இதுவே அவரது பயண திட்டம். அவரது உடல்நிலை பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ராஜா சார் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள'' என்றார்.