துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இயக்குனர் பாலாவிடம் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவரும், 'ஆச்சார்யா' என்ற படத்தை இயக்கியவருமான ஆச்சார்யா ரவி, உடல் நலக் குறைவால் காலமானார்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது சொந்த உரான மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(டிச., 28) காலை காலமானார்.
'என்னதான் பேசுவதோ' என்ற படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்தப் படம் முடிந்து எட்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. அப்படத்தை எப்படியும் வெளியில் கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சியில் இருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இயக்குனர் பாலா, சூர்யா இணையும் படத்திற்கான கதை விவாதத்தில் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.