பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக கவுரவ ஆலோசகர் டி.ராஜேந்திரன், தலைவர் உஷா ராஜேந்தர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வி.பி.எப் கட்டணம். இக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
அயல்நாடுகளில் பெரும்பாலும் வி.பி.எப் கட்டணம் கிடையாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள் மீது ஒரு சுமையாக செலுத்தப்பட்டு இந்த கட்டணத்தால் சிறுபட தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே, வி.பி.எப் கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். அதே போல், எல்.பி.டி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்யவேண்டும் என்று அரசிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதனையும் வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
திரைத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உணர்வுள்ளவர்கள் அனைவரும் 'கவன ஈர்ப்பு' ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.