புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரானோ வைரஸின் அடுத்த கட்ட பாதிப்பான ஒமிக்ரான் அச்சுறுத்தல் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நிலைமைக்கேற்ப முடிவுகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் திரையுலகின் மையமான மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், இரவு நேரக் காட்சிகள் நடைபெற வாய்ப்பில்லை. ஏற்கெனவே அந்த மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான்-இந்தியா படங்களாக அடுத்த மாதம் 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஒமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
50 சதவீத இருக்கைகள், இரவு நேர ஊரடங்கு என வந்தால் தமிழிலும் வெளியாகும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் வெளியாக உள்ளது. இந்த புதிய சிக்கலால் வசூல் குறைய வாய்ப்புள்ளது.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் யோசிக்க ஆரம்பித்தால் தியேட்டர்கள் பக்கமும் வர மாட்டார்கள். அடுத்த பத்து நாட்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் படங்களின் வெளியீடும் அமையும். பெரிய அளவில் இந்தப் பெரிய படங்களுக்கு வியாபாரம் நடந்துள்ள நிலையில் படங்களை தள்ளி வைப்பார்களா அல்லது வருவது வரட்டும் என படங்களை வெளியிடுவார்களா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.