புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய அளவில் பெரிய பட்ஜெட் படங்கள் சில உருவாகி வருகின்றன. பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்', ராஜமவுலி இயக்கும் 'ஆர்ஆர்ஆர்', அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா, மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்', ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார்', தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் அவற்றில் சில முக்கியமான படங்கள்.
இவற்றில் சில படங்கள் கடந்த வருடமே வந்திருக்க வேண்டியவை. ஆனால், கொரோனாதொற்று காரணமாக அவற்றின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்தி முடிக்க முடியாததால் அவை இந்த வருடத்திற்குத் தள்ளிப் போயின. இருந்தாலும், இந்த வருடமும் அந்தப் படங்கள் வெளிவருமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.
மேலே, குறிப்பிட்ட படங்களில் 'மரைக்கார்' படம் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அந்தப் படம் சம்பந்தப்பட்ட சில ஹீரோக்கள் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் திரும்பி வந்தாலும் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
அந்தப் படங்கள் அனைத்துமே பல கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படங்கள். வெளியீட்டில் தாமதம் ஆக ஆக அந்தப் படங்களின் செலவினமும் அதிகமாகி வரும். அதனால், படத் தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
படம் தயாராகி வெளிவரும் சமயத்தில் வேறு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் தியேட்டர்களுக்குத் திரும்பி வந்தால்தான் அவர்கள் செலவழித்த பல கோடி முதலீட்டைத் திரும்பப் பெற முடியும்.