ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'ஆர் 23 ; கிரிமினல்'ஸ் டைரி'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகிறது. குறும்பட நடிகர் ஆதி சுந்தரேஸ்வரன், ஜெகா, ராகேஷ் சேது ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். யாஷிகா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
பெரும் விபத்தை சந்தித்து மறுவாழ்வு பெற்றுள்ள யாஷிகா ஆனந்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கவுதம் ராகவேந்திரா கூறியதாவது: இந்தப்படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதையும் கூட இதுவரை வந்திராத புதுமையானதாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படம் பார்க்கிறவவர்கள். ஒரு நிமிடத்த தவற விட்டாலும் அவர்களுக்கு படத்தின் கதை புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிஸ் பண்ணாம பார்த்தால் தான் இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்னன்னு புரியும். இந்த படம் யாஷிகாவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்கிறார்.




