மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் 'ஆர் 23 ; கிரிமினல்'ஸ் டைரி'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் உருவாகிறது. குறும்பட நடிகர் ஆதி சுந்தரேஸ்வரன், ஜெகா, ராகேஷ் சேது ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். யாஷிகா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
பெரும் விபத்தை சந்தித்து மறுவாழ்வு பெற்றுள்ள யாஷிகா ஆனந்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கவுதம் ராகவேந்திரா கூறியதாவது: இந்தப்படத்தின் டைட்டில் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதையும் கூட இதுவரை வந்திராத புதுமையானதாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படம் பார்க்கிறவவர்கள். ஒரு நிமிடத்த தவற விட்டாலும் அவர்களுக்கு படத்தின் கதை புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிஸ் பண்ணாம பார்த்தால் தான் இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்னன்னு புரியும். இந்த படம் யாஷிகாவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்கிறார்.