'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. அல்லு அர்ஜுன் ஜோடியாக அவர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் 17ம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புஷ்பா குழுவினரை வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கதாநாயகி ராஷ்மிகா, “கீதா கோவிந்தம்' படத்தின் இசை வெளியீட்டில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது, அவருடன் நடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையைத் தெரிவித்தேன். இன்று நான் அவருடைய ஸ்ரீ வள்ளி. இந்த வாய்ப்பை வழங்கிய அல்லு அர்ஜுனுக்கு நன்றி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்காக நான் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடித்தேன். அதனால் எனது பெற்றோரைக் கூடப் பார்க்கவில்லை. அவர்கள் என்னை மறுத்துவிட்டார்கள். அதனால் சுகுமார் சார் என்னை ததெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உடனே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புகிறேன்.
அல்லு அர்ஜுனுக்காக புஷ்பா படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்தால் 5 முதல் 10 சதவீதம் பேராவது என்னையும் பார்க்க வருவார்கள். இப்படத்தை ஸ்டார்களுக்காகக் பார்க்காமல் அந்தக் கதாபாத்திரங்களுக்காகப் பார்க்க வேண்டும் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். குறிச்சி வச்சிக்குங்க, டிசம்பர் 17ம் தேதி ஒரு சிறப்பான டிரீட்டை நீங்க பார்க்கப் போறீங்க,” என்றார்.