கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

திரைக்கதை மன்னன் என புகழப்படும் பாக்யராஜின் வாரிசாக அறிமுகமானவர் சாந்தனு. இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இத்துடக்காக போராடி வருகிறார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று மீம்களை போட்டு கேலி செய்தனர்.
அதற்கு பதில் கொடுத்த சாந்தனு, எத்தனை நிமிடங்கள் வருகிறோம் என்பது முக்கியமில்லை. விஜய் போன்ற ஸ்டார் படத்தில் ஒரு நிமிடம் நடித்தாலே எனக்கு போதும் என்று கூறி இருந்தார். அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் மிகவும் முதிர்ச்சியாகவே பதில் அளிப்பார் சாந்தனு. தற்போது இவர் 'முருங்கைகாய் சிப்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜர் என்பவர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக நடிகர் சாந்தனு பல்வேறு விதமான புரமோஷன் கலை சமூக வலைத்தளத்தில் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தப் படத்தின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில் 'ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம் மேதாவி அறிவைக் கொண்டு யாரும் இந்த படத்திற்கு வர வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கு இதைவிட வாழ்க்கையில் பல வேலைகள் இருக்கும். மற்றவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க, உங்களின் கவலைகளை மறப்பீர்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஒருவர் பொழுதுபோக்கு படத்திற்கு நாங்கள் எங்களுடைய பணத்தை வீணாக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சாந்தனு 'அப்போ வீணாக்காதீர்கள் சிம்பிள்' என்று பதில் கொடுத்திருக்கிறார்.