Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகரின் கேலிக்கு சாந்தனு கொடுத்த பதில்

08 டிச, 2021 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Shanthanu-replied-to-fans-who-trolled

திரைக்கதை மன்னன் என புகழப்படும் பாக்யராஜின் வாரிசாக அறிமுகமானவர் சாந்தனு. இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இத்துடக்காக போராடி வருகிறார். கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று மீம்களை போட்டு கேலி செய்தனர்.

அதற்கு பதில் கொடுத்த சாந்தனு, எத்தனை நிமிடங்கள் வருகிறோம் என்பது முக்கியமில்லை. விஜய் போன்ற ஸ்டார் படத்தில் ஒரு நிமிடம் நடித்தாலே எனக்கு போதும் என்று கூறி இருந்தார். அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் மிகவும் முதிர்ச்சியாகவே பதில் அளிப்பார் சாந்தனு. தற்போது இவர் 'முருங்கைகாய் சிப்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜர் என்பவர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக நடிகர் சாந்தனு பல்வேறு விதமான புரமோஷன் கலை சமூக வலைத்தளத்தில் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தப் படத்தின் போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் 'ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம் மேதாவி அறிவைக் கொண்டு யாரும் இந்த படத்திற்கு வர வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கு இதைவிட வாழ்க்கையில் பல வேலைகள் இருக்கும். மற்றவர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க, உங்களின் கவலைகளை மறப்பீர்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஒருவர் பொழுதுபோக்கு படத்திற்கு நாங்கள் எங்களுடைய பணத்தை வீணாக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த சாந்தனு 'அப்போ வீணாக்காதீர்கள் சிம்பிள்' என்று பதில் கொடுத்திருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாநகரில் அனாதையாக அலைந்து இறந்த ‛மாநகர காவல்' பட இயக்குனர் : உடலை எடுத்து உதவி செய்த ‛மாநகர காவல்'மாநகரில் அனாதையாக அலைந்து இறந்த ... யானை - டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய் யானை - டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in