மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பருவமழையால் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. இதில் மூன்று மாநிலங்களுமே வெள்ளத்தில் மிதந்தது. என்றாலும் பொருள், உயிர்சேதம் ஆந்திராவில் அதிகமாக இருந்தது. திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதனால் ஆந்திர அரசு வெள்ள நிவாரண நிதி திரட்டியது. இந்த நிதிக்கு திரைப்பட நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு ஆகியோர் தலா 25 லட்சம் வழங்கினார். கடந்த ஆண்டு கொரோனா நிதியாக பல கோடிகளை அள்ளிக் கொடுத்த பிரபாஸ் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.