கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
தெலுங்குத் திரையுலகில் கிளாமர் டாலாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழில் 'சுல்தான்' படத்தில் மட்டுமே நடித்தார். மீண்டும் இந்தப் பக்கம் எப்போது வருவார் என தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ராஷ்மிகாவின் அடுத்த பெரிய வெளியீடாக 'புஷ்பா' படம் வெளிவர உள்ளது. அல்லு அர்ஜுன் ஜோடியாக வள்ளி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இயல்பாகவே நல்ல சிவப்பாக இருக்கும் ராஷ்மிகா இந்தப் படத்திற்காக கருப்பு நிற மேக்கப்புடன் கிராமத்துப பெண்ணாக மாறியிருக்கிறார்.
சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பெண்களுக்கு கிராமத்துப் பெண்களின் பழக்க, வழக்கம், நடை, உடை அவ்வளவு சீக்கிரம் வராது. அதனால் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டாராம் ராஷ்மிகா.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில், “இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். கிராமத்து பெண்களின் மேனரிசங்கள், அவர்களது முகபாவங்கள் எப்படி இருக்கும் என்பதை கற்றுக் கொண்டேன். திருப்பதி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள பெண்களுடன் பழகினேன், பேசினேன். அவர்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது, உடல்மொழி எப்படி உள்ளது என்றும் கூர்ந்து கவனித்து தெரிந்து கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது, படம் டிசம்பர் 17ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.