கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இயக்குனர் விஜய் கதை எழுதி, தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இயக்க சமுத்திரகனி, சாய் பல்லவியின் தங்கை பூஜா, ரீமா கல்லிங்கல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அப்பா - மகள் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஓடிடியில் டிச.,3ல் வெளியாகிறது.
பூஜா கண்ணன் சினிமாவில் அறிமுகமாகும் முதல்படம் இதுவாகும். அவர் கூறுகையில், ‛‛அம்மா மாதிரி சாய்பல்லவி என்னை பார்த்துக் கொள்வார். என் மீது அதிக அக்கறை காட்டுவார். ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசை இல்லை. அக்காவுடன் படப்பிடிப்பு, டப்பிங் சென்றபோது எனக்கும் அந்த ஆசை வந்தது. இதை வீட்டில் சொல்ல பயந்தேன். இயக்குனர் விஜய் தான் என் நடிப்பு ஆசையை கண்டுபிடித்து எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்று அக்கா விரும்பினார். கொடுக்கிற ரோலை சரியாக பண்ணு என்றார். ஒரே ஒரு நாள் அக்காவை டப்பிங் ஸ்டுடியோவுக்கு வரவைத்து நான் சரியாக பேசி இருக்கேனா என போட்டுக் காட்டினேன். நல்லா பண்ணிருக்க என்றார். படப்பிடிப்புக்கு நான் மட்டும் தான் போவேன். அம்மாவோ, அக்காவோ இருந்தால் பயம் வரும் என்றார்.