‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சூர்யா தயாரித்து நடித்து வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கியது. இப்போதுவரை அந்த பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சிம்புவின் மாநாடு படமும் தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள் ளது.
அதாவது, ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டர் காட்சிக்கு எதிராக பாமகவினர் கொடி பிடித்த நிலையில், தற்போது மாநாடு படத்திற்கு எதிராக பாஜகவினர் கொடி பிடித்துள்ளனர். மாநாடு படத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. அதனால் தமிழக அரசு தலையிட்டு அதுபோன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ., சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு, மாநாடு படத்தில், அமெக்காவில் குண்டு வெடிச்சா பயங்கரவாதி என்கிறோம். இந்தியாவில் வெடித்தால் முஸ்லீம் பயங்கரவாதி என்கிறோம். பயங்கரவாதிக்கு ஏது சாதி மதம் என்று இஸ்லாமியராக நடித்துள்ள சிம்பு பேசுவதையும் குறிப்பிட்டுள்ள பா.ஜ.,வினர், அப்படத்தின் கடைசி காட்சியில் ரயில் நிலைய பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதை காண்பிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் மாநாடு படத்திற்கு எந்தமாதிரியான ரியாக்சனை ஏற்படுத்தப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.




