பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'மாநாடு' படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்ஜே சூர்யா. இக்கதாபாத்திரத்தில் முதலில் அரவிந்த்சாமி தான் நடிப்பதாக இருந்தது. படம் கொஞ்சம் தாமதமானதால் அவருக்குப் பதிலாக எஸ்ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 4ம் தேதி டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். அந்த டுவீட்டை அப்போதே குறிப்பிட்டு எஸ்ஜே சூர்யா, “நன்றி தயாரிப்பாளர் சார், இயக்குனர் வெங்கட்பிரபு சார். என்ன ஒரு கதை, என்ன ஒரு விவரிப்பு. அற்புதமான விவரிப்பால் மிரண்டு விட்டேன். இந்த புராஜக்ட் கண்டிப்பாக எல்லைகளைக் கடக்கும். எனது நண்பன் சிம்புடன் இணைவது பெரும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் தான் பதிவிட்ட அந்த டுவீட்டை தற்போது மீண்டும் குறிப்பிட்டு “பிப்ரவரி 4, 2020ம் தேதியன்று இயக்குனர் வெங்கட் பிரபு 'மாநாடு' படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். அவருடைய அற்புதமான விவரிப்பைப் பார்த்து அவரைக் கட்டித் தழுவி அன்றைய தினமே அந்த டுவீட்டைப் பதிவிட்டேன். இன்று இந்த உலகமே மாநாடு படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த லின்க்கை மீண்டும் ஷேர் செய்வதில் மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தில் சிம்புவின் நடிப்பைவிட எஸ்ஜே சூர்யாவின் நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.