அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள மாநாடு படம் கடந்த 25ந் தேதி பெரும் போராட்டத்துக்கு பிறகு வெளிவந்தது. விமர்சனங்களும் பெரும்பாலும் பாராட்டியே வந்துள்ளதால் அடாத மழையிலும் படம் வசூலை குவிப்பதாக கூறப்படுகிறது. சிம்பு உடம்பை குறைத்து, அடக்கி வாசித்து, பன்ஞ் டயலாக் எதுவும் பேசாமல் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருப்பதால் படம் எல்லோருக்கும் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு படங்களிலேயே இந்த படம்தான் அதிகம் வசூலிப்பதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து படக் குழுவினர் வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுக்கு கேக் ஊட்டி மகிழும் படங்கள் இப்போது சமூக வலைத்தளத்தில் சிம்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினி பாராட்டு
இதனிடையே மாநாடு படத்தை பார்த்துவிட்டு நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை போனில் அழைத்து பாராட்டி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதுகுறித்து தங்களின் மகிழ்ச்சியான பதிவுகளை சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு ஆகியோர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.