படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் இந்த இரண்டு துறைகளின் முக்கிய அதிகார மையங்களாக திகழ்ந்த, இப்போதும் திகழ்கின்ற ஏரியா என்றால் அது சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் இங்கே தான் உள்ளன. சமீபத்தில் கூட நடிகர் தனுஷும் இங்கே இடம் வாங்கி தனி வீடு கட்டு ஒன்றை பிரமாண்டமாக கட்டி வருகிறார்.
இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாராவும் தற்போது இந்தப்பகுதியில் உள்ள பிரமாண்டமான அபார்ட்மெண்ட் ஒன்றில் நான்கு படுக்கையறை வசதி கொண்ட இரண்டு வீடுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நல்ல நாள் பார்த்து இந்த வீட்டில் குடியேற இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின் அமைதியான இந்த ஏரியாவில் தான் வசிக்கவும் விரும்புகிறாராம்.