பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் ஏ.எல்.விஜய் கதை எழுதி, தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். இதனை சண்டை இயக்குனர் சில்வா இயக்கி இருக்கிறார். இதில் சமுத்திரகனி, நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஓடிடி தளத்திற்கென்று தயாராகி உள்ள இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி முதல் வெளிவர இருக்கிறது. இது தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான அன்பை சொல்லும் படம்.
இந்த படத்தின் டைட்டிலுக்கு தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த தலைப்பு எங்களிடம் உள்ளது என்று அத்திலி சினிமா என்ற நிறுவனம், இயக்குனர் சில்வாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.எல்.விஜய்க்கும், வெளியிடும் ஜீ5 நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சித்திரை செவ்வானம் தலைப்பை ஏற்கனவே அத்திலி சினிமா தனது பெயரில் 17.03.2020 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளது. சித்திரைச் செவ்வானம் படத்தின் அறிவிப்பை பார்த்த அத்திலி சினிமா நிறுவனம், படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த பதிலும் வராத நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.