ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்து ஓடிடியில் நவ., 2ல் வெளியான படம் ‛ஜெய் பீம்'. இப்படத்திற்கு பாராட்டுகள் ஒருபக்கம் கிடைத்தாலும் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தி காட்சிகள், குறியீடுகள் இருந்ததாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும், பா.ம.வினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட படக்குழு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னையை தீர்க்க இயக்குனர் ஞானவேல் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், ஜோதிகா(தயாரிப்பாளர்) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.