லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்து ஓடிடியில் நவ., 2ல் வெளியான படம் ‛ஜெய் பீம்'. இப்படத்திற்கு பாராட்டுகள் ஒருபக்கம் கிடைத்தாலும் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தி காட்சிகள், குறியீடுகள் இருந்ததாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும், பா.ம.வினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட படக்குழு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னையை தீர்க்க இயக்குனர் ஞானவேல் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், ஜோதிகா(தயாரிப்பாளர்) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.