ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ |
சூர்யாவின் முக்கியமான சில படங்களில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் முக்கிய படங்களாகும். இந்த படங்களில் தான் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக செதுக்கினார் பாலா. ஆனபோதிலும் அதன்பிறகு அவர்கள் இணையாத நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.
ஜெயபீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சிவா, ரவிக்குமார் என சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில் தற்போது டிசம்பரில் மாதம் முதல் பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை முதலில் அதர்வாவை வைத்து பாலா இயக்கயிருந்த நிலையில் சூர்யா தயாரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று கதையில் செய்த சில திருத்தங்கள் காரணமாக இப்போது அந்த படத்தில் சூர்யாவே நாயகனாகி விட்டார்.