மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சூர்யாவின் முக்கியமான சில படங்களில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் முக்கிய படங்களாகும். இந்த படங்களில் தான் சூர்யாவை ஒரு சிறந்த நடிகராக செதுக்கினார் பாலா. ஆனபோதிலும் அதன்பிறகு அவர்கள் இணையாத நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் சூர்யா.
ஜெயபீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன், சிவா, ரவிக்குமார் என சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தநிலையில் தற்போது டிசம்பரில் மாதம் முதல் பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தை முதலில் அதர்வாவை வைத்து பாலா இயக்கயிருந்த நிலையில் சூர்யா தயாரிக்க இருந்தார். ஆனால் திடீரென்று கதையில் செய்த சில திருத்தங்கள் காரணமாக இப்போது அந்த படத்தில் சூர்யாவே நாயகனாகி விட்டார்.