ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! | எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு படத்திற்காக பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவ்வளவு? | நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! |
தமிழில் வாய் மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். தற்போது தமிழில் ஹாய் சினாமிகா இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனவும் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛விஜய்யின் நடனம் குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் விஜய்யின் ரசிகன். இதற்கு காரணம் அவரது நடனம்தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறேன். முக்கியமாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடி இருப்பார். அது அத்தனை எளிதான விசயமல்ல. என்னை பொருத்தவரை விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தெரிகிறார். அவரது நடனத்திற்கு எப்போதுமே நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான்.