புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் வாய் மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். தற்போது தமிழில் ஹாய் சினாமிகா இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனவும் பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛விஜய்யின் நடனம் குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் விஜய்யின் ரசிகன். இதற்கு காரணம் அவரது நடனம்தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறேன். முக்கியமாக மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடி இருப்பார். அது அத்தனை எளிதான விசயமல்ல. என்னை பொருத்தவரை விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தெரிகிறார். அவரது நடனத்திற்கு எப்போதுமே நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான்.