மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் வாரிசு தான் துஷ்யந்த். கடந்த 2003லேயே ஹீரோவாக அறிமுகமான இவர் சக்சஸ், மச்சி என இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். அவை சரியான வரவேற்பு பெறாத நிலையில் சில வருடங்கள் கழித்து தயாரிப்பாளராக மாறி ஒன்றிரண்டு படங்களை தயாரித்தார். இந்தநிலையில் தற்போது அஸ்த்ரா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார் துஷ்யந்த்.
“நீண்ட நாட்கள் கழித்து நடிப்புக்கு திரும்புவதால் மலையாள திரையுலகில் கால் வைப்பதுதான் சரி என தோன்றியது.. காரணம் அங்கே வில்லனாக நடித்தாலும் இரண்டு காட்சிகளில் வந்துபோகும் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் பேசவைத்து விடுவார்கள். அதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை எளிதாக கைப்பற்ற முடியும்.. அந்தவகையில் அவர்கள் சொன்ன கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டேன்” என்கிறார் துஷ்யந்த்.