25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். 20 ஆண்டுகளுக்கு முன்பு 'சக்சஸ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மச்சி' என்ற படத்தில் நடித்தார். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே நடிப்பில் இருந்து விலகி சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தையும், வேறு சில தொழில் நிறுவனங்களையும் நடத்தி வந்தார். ஈஷான் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, மீன் குழம்பும் மண்பானையும், ஜெகஜாலகில்லாடி படங்களை தயாரித்தார் இந்த படங்களும் பேசப்படவில்லை.
இந்த நிலையில் துஷ்யந்த் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் 'தீர்க்கதரிசி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் படத்தை தயாரித்துள்ளார். மோகன், சுந்தரபாண்டிய ஆகியோர் இயக்கி உள்ளனர். இந்த படத்தின் அறிமுகவிழா நடந்தபோது இதில் துஷ்யந்தனும், அவரது தந்தை ராம்குமாரும் ஒன்றாக கலந்து கொண்டு தயாரிப்பாளருக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.