25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ஹீரோக்கள் ஒன்றாக சந்தித்துக் கொள்வது ரொம்பவே அரிதான விஷயம். ஏதாவது பிரபலங்களின் திருமணம் என்றால் கூட தனித்தனி நேரங்களில் தான் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நடிகர்கள் விஜய்யும், சூர்யாவும் நீண்ட காலம் கழித்து நேற்று சந்தித்துள்ளனர்.
பெருங்குடியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அடுத்தடுத்த அரங்குகளில் விஜய் நடிக்கும் பீஸ்ட் மற்றும் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவை இரண்டுமே ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் தான். அந்தவகையில் நேற்று படப்பிடிப்புக்காக வந்த சூர்யாவும், விஜய்யும் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேசிக் கொண்டனர். அந்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா நடிகராக அறிமுகமானதே விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் தான். பிறகு இருவரும் இணைந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்தனர். சூர்யா நடித்த ஆதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் கலந்து கொண்டார். அதன்பின் ஓரிரு விருது விழா உள்ளிட்ட சில நிகழ்வுகளில் இருவரும் கலந்து கொண்டனர்.