கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது டுவிட்டரில் பெரிய அளவிலான ராகவேந்திர சுவாமியின் சிலை முன்பு தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதோடு, இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ராகவேந்திரா சுவாமிகளின் சிலையை நிறுவ வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. அது தற்போது நனவாகியுள்ளது. மிக விரைவில் அந்த சிலை பொதுக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலை 15 அடி நீளத்தில் மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா சுவாமி சிலை முன்பு லாரன்ஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலானது.