ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது டுவிட்டரில் பெரிய அளவிலான ராகவேந்திர சுவாமியின் சிலை முன்பு தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதோடு, இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ராகவேந்திரா சுவாமிகளின் சிலையை நிறுவ வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வந்தது. அது தற்போது நனவாகியுள்ளது. மிக விரைவில் அந்த சிலை பொதுக்களின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிலை 15 அடி நீளத்தில் மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா சுவாமி சிலை முன்பு லாரன்ஸ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலானது.