மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் கைவசம் ‛குருப்', 'ஹே சினாமிகா', 'சல்யூட்' உள்ளிட்டப் படங்கள் உள்ளன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குனர் பால்கியின் த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் 'குருப்' முன்பு, ஓடிடி.,யில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், கேரளாவில் அக்.,25ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், தியேட்டரிலேயே வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
துல்கர் சல்மானே தயாரித்துள்ள இப்படத்தில், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது.