இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்து பொதுமக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்தநாள் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அப்போது மருத்துவக்குழு மறுத்தது.
அதோடு, தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆணையம் விவேக் மரணம் குறித்த ஆய்வு அறிக்கை கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி காரணமாக நடிகர் விவேக் மரணமடையவில்லை. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.