22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்து பொதுமக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்தநாள் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அப்போது மருத்துவக்குழு மறுத்தது.
அதோடு, தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆணையம் விவேக் மரணம் குறித்த ஆய்வு அறிக்கை கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசி காரணமாக நடிகர் விவேக் மரணமடையவில்லை. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.