இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
தீபாவளி தினத்தன்று 'அண்ணாத்த, மாநாடு, எனிமி' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்தப் போட்டியிலிருந்து 'மாநாடு' படம் விலகியது. அதிகமான தியேட்டர்களில் வெளியிட விரும்பி 'மாநாடு' பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துவிட்டார். அதனால், தற்போது 'அண்ணாத்த, எனிமி' ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளன.
ஒரே சமயத்தில் 'அண்ணாத்த' படத்துடன் மேலும் இரண்டு படங்களுக்குத் தியேட்டர்களை ஒதுக்குவதில் சிரமம் என தியேட்டர்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். 'மாநாடு' படத்தை 500 தியேட்டர்களிலாவது வெளியிட வேண்டும் என அதன் தயாரிப்பாளர் விரும்பினாராம்.
'அண்ணாத்த' படத்திற்கு மட்டுமே 600 தியேட்டர்கள் போய்விடும் நிலையில் தற்போது 'எனிமி' படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'மாநாடு' போட்டியிலிருந்து விலகியதால் அது 'எனிமி' படத்திற்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், 'எனிமி' படத்திற்கான வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.
'அண்ணாத்த, எனிமி' இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.