புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தீபாவளி தினத்தன்று 'அண்ணாத்த, மாநாடு, எனிமி' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்தப் போட்டியிலிருந்து 'மாநாடு' படம் விலகியது. அதிகமான தியேட்டர்களில் வெளியிட விரும்பி 'மாநாடு' பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துவிட்டார். அதனால், தற்போது 'அண்ணாத்த, எனிமி' ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளன.
ஒரே சமயத்தில் 'அண்ணாத்த' படத்துடன் மேலும் இரண்டு படங்களுக்குத் தியேட்டர்களை ஒதுக்குவதில் சிரமம் என தியேட்டர்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். 'மாநாடு' படத்தை 500 தியேட்டர்களிலாவது வெளியிட வேண்டும் என அதன் தயாரிப்பாளர் விரும்பினாராம்.
'அண்ணாத்த' படத்திற்கு மட்டுமே 600 தியேட்டர்கள் போய்விடும் நிலையில் தற்போது 'எனிமி' படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'மாநாடு' போட்டியிலிருந்து விலகியதால் அது 'எனிமி' படத்திற்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், 'எனிமி' படத்திற்கான வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.
'அண்ணாத்த, எனிமி' இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.